தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 15, 2020, 1:21 PM IST

ETV Bharat / sitara

'மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாதீர்கள்' - கொரோனா குறித்து கரீனா கபூர் ட்வீட்

கொரோனா வைரஸ் குறித்து நடிகை கரீனா கபூர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து கரீனா கபூர் ட்விட்
கொரோனா வைரஸ் குறித்து கரீனா கபூர் ட்விட்

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஒரு கை பார்த்துள்ளது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. மேலும் திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் பதிவு வெளியிட்டுவருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கொடுத்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ”ஒவ்வொரு நிமிடத்திற்கும் கொரோனா வைரஸ் குறித்து பலவிதமான செய்திகள் வெளியாகின்றன. அவை அனைத்துமே மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. நீங்களும் பயந்து மற்றவர்களையும், பயம் ஏற்றாதீர்கள். ஏனென்றால் உங்கள் செயல் சுற்றியுள்ளவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் குறித்து கரீனா கபூர் ட்வீட்

கொரோனா வைரசிலிருந்து மக்களைக் காக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நாமும், நம்மால் முடிந்தைச் செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கொரோனா: ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கிய சோனம் கபூர்!

ABOUT THE AUTHOR

...view details