நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் அவரது வீட்டில் மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். வாரிசு அரசியல் காரணமாக தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை கங்கனா சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
இதைக் கண்ட நடிகர் அனுராக் காஷ்யப், "கங்கனாவின் பேட்டியைப் பார்த்தேன். அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். எனது படத்தின்போதும் எனக்கு தன்னம்பிக்கையை ஊக்குவிப்பார். ஆனால் இது புதிய கங்கனாவாக இருக்கிறது.
கங்கனாவின் சமூகவலைதள அணியே, வேண்டாம். நீங்கள் என்னை நோக்கி வீசப்போகும் அவதூறுகள் குறித்து எனக்கு ஒருபோதும் கவலையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கங்கனாவின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். "இதோ வந்துவிட்டார் சின்ன மகேஷ் பட். கங்கனா தனியாக, அவரைப் பயன்படுத்திக் கொள்ளும் போலியான மக்களுக்கு நடுவில் இருப்பதாக சொல்கிறார்.
தேசத்துக்கு எதிரானவர் தற்போது திரைப்பட மாஃபியாவையும் பாதுகாக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.