தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 18, 2020, 9:55 PM IST

ETV Bharat / sitara

ஓவியத்தை ஏலம் விட்டு நிதி திரட்டும் மனுஷி ஷில்லார்!

நடிகை மனுஷி ஷில்லார் தனது ஓவியத்தை ஏலம் விட்டு நிதி திரட்டி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறார்.

மனுஷி
மனுஷி

கரோனா வைரஸ் காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கால் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இதையொட்டி திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளிய மக்களுக்குச் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை மனுஷி ஷில்லார், ஸ்மைல் என்ற அமைப்புடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

அதாவது தான் வரையும் ஓவியத்தை, ஸ்மைல் அமைப்புடன் இணைந்து இணையத்தில் விற்பனை செய்துள்ளார்.

அதில் வரும் பணத்தை வைத்து மக்களுக்கு உதவி செய்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "நாம் அனைவரும் பத்திரமாக வீட்டில் இருக்கிறோம். ஆனால் நம் வாழ்க்கையின் நிஜ ஹீரோக்களான விவசாயிகள், ட்ரக் ஓட்டுநர்கள் உள்பட ஏராளமானோர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பு மூலம் அவர்களுக்கு உதவி செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளார். இவரின் சேவையை பலரும் பாராட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details