இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. டெல்லியில் நடந்த இஸ்லாமிய மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கரோனா உறுதியாகியுள்ள 234 நபர்களில் 190 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள்.
இந்நிலையில் மத வழிபாட்டு கூடங்களில், கூடி குழப்பத்தை ஏற்படுத்தம் நேரம் இது அல்ல என்றும், ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் விதத்தில் ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “தைரியமாக மருத்துவமனைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்தியா முழுக்க பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லவே இந்த செய்தி. இவ்வளவு பயங்கரமான நோயை சமாளிக்க அவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் உயிரை பணயம் வைத்து நம் உயிரை காப்பாற்றுகிறார்கள்.