இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவரின் நாயகன், தளபதி, மௌன ராகம், ரோஜா, அலைபாயுதே, இருவர், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட கிளாசிக் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பதே மணிரத்னத்தின் நெடுநாள் கனவு. இதற்காக பலமுறை முயற்சி எடுத்து கைகூடவில்லை. தற்போது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை உயிர் கொடுக்க தீவிரம் காட்டி வருகிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மல்டி ஸ்டார்கள் நடிக்க உள்ளனர்.