சென்னை: குறிப்பட்ட சாதி பெயரைக் கூறி தன்னை விமர்சித்த நபருக்கு நடிகை ரித்விகா ட்விட்டரில் சாட்டையடி பதில் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ரித்விகா தனது ட்விட்டரில், "இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல. இனிமேலும் வருமாயின் அதற்கான பதிலாகவும்" என்று குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தலித்தாக இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால் அந்த பாக்கியத்தைப் பெறவில்லை. நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுக்குள் பிறந்தவள் என்பதால் வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம்.
ஒரு வகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனில் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலம் காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. என்னை தலித்தாக்கிய பிழையும் பாவமும் ஆணினத்தை சாரும். மற்றபடி என அழகை பாராட்டியதற்கு நன்றி. பின்குறிப்பு: தலித் பெண்கள் என்னை விட அழகு, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.