ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மாதா, பிதாவுக்கு பிறகு குரு முக்கியத்துவம் பெறுகிறார். இந்த குருவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் கினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
விவேக் நினைவு கூர்ந்த ஆசிரியர்கள்!
நடிகர் விவேக் ஆசிரியர் தினத்தையெட்டி தனது ஆசிரியர்களை நினைவு கூர்ந்து பதிவிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.
அந்த வகையில் குடியரசு தலைவர், பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய நான்கு ஆசிரியர்களின் புகைப்படத்தை பதிவேற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது சல்யூட். இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் விவேகானந்தர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், இயக்குநர் பாலச்சந்தர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஆகியோரை தனது ஆசிரியர்கள் என பதிவு செய்துள்ளார். இவர் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் அதனை அதிகமாக லைக் செய்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.