தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 8, 2020, 7:35 PM IST

ETV Bharat / sitara

"பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி" - கரோனாவில் இருந்து மீண்ட அபிஷேக் பச்சன்!

நடிகர் அபிஷேக் பச்சன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அபிஷேக் பச்சன்
அபிஷேக் பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நான்கு பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சமீபத்தில் ஐஸ்வர்யா, ஆராத்யா, அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில், அபிஷேக் பச்சன் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்று(ஆக.8) பிற்பகல் செய்த பரிசோதனையில் எனக்குக் கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது. இதிலிருந்து நான் வெல்வேன் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.

மேலும் நானாவதி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் செய்த எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details