ஹைதராபாத்: இன்று ராணி போல் வாழும் நடிகை கரீனா கபூர், அவரது அக்கா கரிஷ்மா கபூரின் கடந்த கால வாழ்க்கை துயரம் நிறைந்தது. இவர்களின் தாயார் பபிதா கபூர் இவர்களை தனி ஆளாக வளர்த்தெடுத்தார். தற்போது பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான கரினா கபூர் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து கரீனா, பிறர் நினைப்பது எங்கள் கபூர் குடும்பம் கடந்த காலத்தில் செல்வ செழிப்பாக வாழவில்லை. எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர என் தாயும் அக்காவும் போராடினார்கள். அதிலும் என் தாய் தனி ஆளாக குடும்பத்தை காத்து நின்றார்.