தமிழ்நாடு

tamil nadu

இரண்டாவது முறையாக கர்ப்பமான கரீனா கபூர்!

மும்பை: புதிய நபரை தங்கள் குடும்பத்தில் எதிர்பார்ப்பதாக ஸ்டார் தம்பதி சைஃப் அலிகான் - கரீனா கபூர் அறிவித்துள்ளனர்.

By

Published : Aug 13, 2020, 1:02 PM IST

Published : Aug 13, 2020, 1:02 PM IST

கரீனா கபூர்
கரீனா கபூர்

பாலிவுட் முன்னணி பிரபலங்களான சைஃப் அலிகானும் கரீனா கபூரும் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தைமூர் என்ற மகன் பிறந்தார்.

சைஃப் அலிகானுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவரின் முதல் மனைவியான அமிர்தா சிங்குக்கு சாரா அலிகான், இப்ராஹிம் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் சாரா அலி கான் தற்போது பாலிவுட்டில் நாயகியாக வலம் வருகிறார்.

இதற்கிடையில், கரீனா கபூர் தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சைஃப் அலிகான் - கரீனா கபூர் அலுவலகத்திலிருந்து வெளியான செய்தியறிக்கையில், 'எங்கள் குடும்பத்தில் கூடுதலாக ஒரு நபரை எதிர்பார்க்கிறோம் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் நல விரும்பிகளின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' என சைஃப் - கரீனா பெயர்கள் இட்டு குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலிருந்து இவர்கள் தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.

சோஹா அலி கான்
இந்த அறிவிப்பை அடுத்து கரீனாவின் நாத்தனார் சோஹா அலி கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது சகோதரர் சைஃப் அலிகானின் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டு "குவாட்பாதர்" என்று பதிவிட்டிருந்தார். நான்காவது முறையாக சைஃப் தந்தை ஆகிறார் என்பதை இது குறிக்கிறது.
தொடர்ந்து, 'கரீனா கபூர் கான் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும்; எப்போதும் போல் பிரகாசமாகவும் இருங்கள். புதிய நபருக்காக எங்களால் காத்திருக்க முடியவில்லை. வாழ்த்துகள்’ என்று சோஹா பதிவிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details