பாலிவுட்டின் முன்னனி நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தந்தை- மகன் இருவரும் விரைவில் குணமாக வேண்டும் என திரைத்துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவருகின்றனர். இந்த சூழலில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாதுரி திக்ஷித், டாப்ஸி பன்னு, ஷாஹித் கபூர், ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துவருகின்றனர்.
இதுகுறித்து நடிகை மாதுரி திக்ஷித் பதிவிடுகையில், நீங்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் அமித் ஜீ. நீங்கள் சீக்கிரமாக குணமடைவீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.