தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 30, 2021, 7:08 PM IST

ETV Bharat / sitara

நடிகை கங்கனாவின் மெய்க் காப்பாளர் மீது வழக்கு!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் மெய்க் காப்பாளர் (Body Guard) மீது, பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்வதாக பெண்ணுக்கு வாக்குறுதி அளித்து, ஏமாற்றியதாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டியா (கர்நாடகம்): பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் மெய்க் காப்பாளர் குமார் ஷெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெகடஹள்ளி கிராமத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அந்தப் புகாரில், தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக அப்பெண் புகாரளித்தார்.

புகைப்பட தொகுப்பு:கத்தரி வெயிலுடன் போட்டி போடும் ’ஹாட்’ ஷிவானி...!

மேலும், அவர் தன்னிடம் இருந்து ரூ.50,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு, திருப்பி அளிக்காமல் ஏமாற்றியதாகவும் அப்பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குமார் ஷெட்டி மீது புகாரளித்த பெண், திரைத் துறையில் ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஏப்ரல் மாதத்தில், குமார் மீது இதே காரணத்துக்காக புகாரளித்திருந்த வேளையில், தற்போது காவல் துறை தரப்பில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details