நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ரஞ்சித் எம். திவாரியின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘பெல்பாட்டம்’. இதில் அக்ஷய் குமாருடன் வாணி கபூர், லாரா தத்தா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
கோவிட்-19 ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் படப்பிடிப்பை முதலில் தொடங்கியது 'பெல்பாட்டம்' திரைப்படக் குழுதான். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்காட்லாண்டில் நடைபெற்றுவருகிறது.
முன்னதாக, ஸ்காட்லாந்து சென்ற ‘பெல்பாட்டம்’ படக்குழுவினர் கரோனா பரவல் காரணமாக 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடங்க முடியாமல் போனது. இது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.