தமிழ்நாடு

tamil nadu

கரோனா பரவல்... பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு... 18 ஆண்டுகளாக கடைப்பிடித்த கொள்கையை கைவிடும் அக்ஷய்குமார்!

By

Published : Sep 21, 2020, 3:43 PM IST

Updated : Sep 21, 2020, 5:25 PM IST

டெல்லி: கோவிட்-19 காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதால், சுமார் 18 ஆண்டுகளாக கடைப்பிடித்த கொள்கையை கைவிட்டு தினசரி 18 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்க அக்ஷய்குமார் சம்மதித்துள்ளார்.

Akshay Kumar
Akshay Kumar

நடிகர் அக்ஷ‌ய் குமார் நடிப்பில் ரஞ்சித் எம். திவாரியின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘பெல்பாட்டம்’. இதில் அக்‌ஷய் குமாருடன் வாணி கபூர், லாரா தத்தா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

கோவிட்-19 ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் படப்பிடிப்பை முதலில் தொடங்கியது 'பெல்பாட்டம்' திரைப்படக் குழுதான். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்காட்லாண்டில் நடைபெற்றுவருகிறது.

முன்னதாக, ஸ்காட்லாந்து சென்ற ‘பெல்பாட்டம்’ படக்குழுவினர் கரோனா பரவல் காரணமாக 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடங்க முடியாமல் போனது. இது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

தயாரிப்பாளரின் கஷ்டத்தை உணர்ந்த அக்ஷய்குமார், தான் 18 ஆண்டுகளாகக் கடைப்பிடித்த கொள்கையை கைவிட்டுள்ளார். பாலிவுட்டில் முன்னணி காதநாயகனாக வலம்வரும் அக்ஷய் குமார் 18 ஆண்டுகளில் எப்போதும் தினசரி எட்டு மணி நேரத்திற்கு மேல் பணிபுரிந்ததில்லை.

ஆனால், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு நாள்களை ஈடு செய்யும் விதமாக தினசரி 18 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்க அக்ஷய்குமார் சம்மதித்துள்ளார். இந்தத் தகவலை ‘பெல்பாட்டம்’ திரைபடத்தின் தயாரிப்பாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவு தெரிவித்த பாலிவுட் நடிகைகள்!

Last Updated : Sep 21, 2020, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details