டெல்லி: புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் தலைகீழாக புத்தகத்தை வைத்திருந்த ஜான்வி கபூரை இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
சின்ன மயிலு என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் கடந்த ஆண்டு வெளியான ’தடக்’ திரைப்படம் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் மராத்தியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சாய்ராத் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்கில் கேர்ள், தோஸ்தானா 2 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ள அவர், தமிழ், தெலுங்கில் நடிப்பதற்கு ஆர்வமாக கதை கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், தல60 படத்தில் ஜான்வி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல எழுத்தாளர் ஹரீந்தர் ஷிக்கா எழுதிய 'காலிங் சேமத்' என்ற புத்தக்கத்தின் ஹிந்திப் பதிப்பு வெளியிட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் ஜான்வி கபூர். அழகான வெள்ளை நிற புடவையுடன் வந்திருந்த அவரை போட்டோகிராபர்கள் கிளிக்கித் தள்ளினர்.
இதையடுத்து புத்தக வெளியீட்டுக்கு பின்னர், 'காலிங் சேமத்' புத்தகம் அவரிடம் கொடுக்கப்பட்ட நிலையில், அதனை தலைகீழாக பிடித்தவாறு போட்டவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், ஜான்வி கபூர் தலைகீழாக புத்தகத்தை பிடித்திருப்பதை குறிப்பிட்டு இணையவாசிகள் பலர் கலாய்த்துள்ளனர்.
தலைகீழாக புத்தகத்தை பிடித்திருக்கும் ஜான்வி கபூர் இருப்பினும் ஒரு சிலர் ஜான்விக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டபோதும், இந்த புத்தக விவகாரத்தால் ஜான்வியின் அழகான தோற்றம் மறந்து போய் அவர் செய்த காரியம் வைரலானது.
எது எப்படியானாலும் ஒரு நடிகைக்கு தேவையான பப்ளிசிட்டி ஜான்வி கபூருக்கும் சிறப்பாகவே கிடைத்துள்ளது.