வில்லிவாக்கம் திருநகர் பகுதியை சேர்ந்த முதியவரான லஷ்மணன் (74), நாதமுனி திரையரங்கு சாலையிலுள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் பணம் வராத நிலையில், அங்கு வந்த ஹெல்மெட் அணிந்த ஒருவர் லஷ்மணனிடம் உதவுவதாக கூறி பணம் எடுத்து கொடுத்துள்ளார். மேலும் எங்கு செல்லவேண்டும் எனக்கேட்டு முதியவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, வீட்டின் அருகே இறக்கி விட்டுள்ளார்.
பின்னர், வீட்டிற்குள் வந்த லஷ்மணன், ஏடிஎம்மில் எடுத்த 12 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ந்து போயுள்ளார். இதையடுத்து உதவுவதாக வந்த நபரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் லஷ்மணன் புகாரளித்த நிலையில், ஏடிஎம் மையத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.