தமிழ்நாடு

tamil nadu

தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தவருக்கு காவல் துறை வலை வீச்சு!

By

Published : Oct 8, 2019, 10:28 PM IST

திண்டுக்கல்: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், ராமசாமி என்பவர் மீது கல்லை தலையில் போட்டு கொலை செய்தவரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Dindigul district

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள பொன்மாந்துரை புதுப்பட்டி, கலிங்கு நகரைச் சேர்ந்தவர் ராமசாமி(55). இவர் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை(40).

இவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். இந்நிலையில், இரண்டு பேருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, ராமசாமியின் தலையில் கல்லைப் போட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டார்.

திண்டுக்கல்லில் கொலை

இதில், ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வட்டார காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசாமியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக் குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் அண்ணனை கட்டையால் அடித்துக்கொன்ற தம்பி!

ABOUT THE AUTHOR

...view details