காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த எல் எண்டத்தூர் கிராமத்தில் நேற்றிரவு (டிச. 16) பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் வாகனத்தில் கடத்திவரப்பட்டு காரில் மாற்றப்படுவதாக உத்திரமேரூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தப்பிய கடத்தல்காரர்கள்
இதையடுத்து தகவலின் அடிப்படையில் மதுராந்தகம் காவல் துணைக்கண்காணிப்பாளர் செல்வி கவினா, உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல் துறையினர் வருவதைக்கண்ட கடத்தல்காரர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பியோடினர்.