இஸ்ரேல்- பாலஸ்தீன் இடையே கடந்த இரு வாரங்களாக தீவிரமான மோதல் போக்கு நிலவிவருகிறது. ரமலான் மாத வழிபாடு போது தொடங்கிய மோதல், இரு தரப்புக்கும் இடையே போர் தாக்குதலாக உருவெடுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவமும் பாலஸ்தீனின் ஹமாஸ் இயக்கமும் மாறிமறி வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாட்டு் எல்லைப்பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக பாலஸ்தீன தரப்பில் சேதாரம் அதிகமாக உள்ளது.
அங்கு நாள்தோறும் மின் விநியோகம் எட்டு மணிநேரம் மட்டுமே உள்ளதாகவும், 41க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் ஐநாவின் அறிக்கை தெரிவிக்கிறது.