உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து மோசமாகிவருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு அரசும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இஸ்தான்புல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மசூதிகளில் கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், துருக்கியின் சாரியர் மாவட்டத்திலுள்ள டெடெமன் மசூதி தற்போது சூப்பர் மார்க்கெட்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு வரும் யாரும் எந்த பொருள்களை வேண்டுமானாலும் விட்டுச் செல்லாம். ஆனால் இங்குள்ள பொருள்கள் எதுவும் விற்பனை செய்யப்படுவதில்லை.
இது குறித்து மசூதியின் இமாம் அப்துல்சமத் காகீர் கூறுகையில், "துருக்கியின் மசூதிகளில் கூட்டுப் பிரார்த்தனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டவுடன் ஏழைகளுக்குத் தேவையான பொருள்களை வழங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. அதன்பிறகே மசூதியை இப்படி சூப்பர் மார்க்கெட்டாக மாற்றினேன்" என்றார்