தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 4, 2020, 8:24 AM IST

ETV Bharat / international

சூடு தணிவதற்குள் அமெரிக்கா மற்றுமொரு தாக்குதல் !

பாக்தாத் : ஈராக் கிளர்ச்சியாளர் ராணுவப் படைத் தளபதியை குறிவைத்து அமெரிக்கா இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியது.

america new air strike in iraq
america new air strike in iraq

அமெரிக்க தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படை தளபதி குவாசிம் சொலைமானி கொல்லப்பட்ட சம்பவம், ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

இது மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்தச் சூடுதணிவதற்குள் ஈராக்கில் அமெரிக்கா தற்போது மற்றொரு வான்வழித் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.

அந்நாட்டு கிளர்ச்சியாளர் (ஹர்சத் அல்-ஷாபி இயக்கம்) ராணுவப் படைத் தளபதியை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலுதலில் பலர் உயிரிழந்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு மேற்கே ஈரான் ஆதரவில் செயல்பட்டுவரும் கிளர்ச்சியாளர்கள் சென்ற இரண்டு கார்கள் மீது இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக் உயர் அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : போருக்கு அறைகூவல்: 2020ஐ அதிர்வுடன் ஆரம்பித்துவைத்த அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details