சீனாவின் வூகான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் (தீநுண்மி) இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய உலக நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகள் ஊரடங்கை நீட்டித்துவருகின்றன.
இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்காததால் நாளுக்கு நாள் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு மருந்தைக் கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிரமாகப் போராடிவருகின்றன. அனைத்து முயற்சிகளும் வீணாகும் வகையில் எந்த ஒரு மருத்துவக் கண்டுபிடிப்பு பயனளிக்கவில்லை.