தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!

பாக்தாத்: ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே பெரும் சத்தத்தோடு குண்டு வெடித்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

By

Published : May 20, 2019, 10:03 AM IST

Updated : May 21, 2019, 8:35 AM IST

ஈராகில் அமெரிக்க தூதரகத்தில் குண்டு வெடிப்பு?

ஈராக் தலைநர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அருகே மே 19ஆம் தேதி திடீரென்று பெரும் சத்தத்தோடு குண்டு வெடித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று ஈராக் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பு குறித்து ஈராக் அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து அவசரநிலைக்கு தேவையற்ற ஊழியர்களை நாடு திரும்புமாறு அமெரிக்கா உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் வலுத்துவருவதால் அரபு, வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

Last Updated : May 21, 2019, 8:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details