உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர் போராடி வருகின்றனர். இரவு பகல் பாராது உழைக்கும் அவர்களுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஸ்வீடன் நாட்டு இளவரசி சோபியா மருத்துவர்களுக்கு உதவி செய்ய நேரடியாகவே களமிறங்கிவிட்டார். ஆம், அந்நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தன் பொறுப்பில் செயல்பட்டு வரும் ’சோபியா ஹெல்மெட்’ என்ற மருத்துவமனையில் மருத்துவப் பணியாளராக பணியாற்ற அவர் முன்வந்துள்ளார்.