தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2020, 10:05 PM IST

ETV Bharat / international

ஜெர்மனி துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் பலி

பிராங்க்பர்ட்: ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆறு பேர் பலியானார்கள்.

Six killed in southern Germany shooting: Reports
Six killed in southern Germany shooting: Reports

ஜெர்மனியின் ரோட் அம் சி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலியானார்கள். இதுகுறித்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை காவலர்கள் கைது செய்தனர்.

அவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த படுகொலையில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

எனினும் காவலர்கள் இதுகுறித்து எவ்வித தகவலும் அளிக்கவில்லை. இரண்டு பேர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின்னணியில் தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details