தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 21, 2020, 1:20 PM IST

ETV Bharat / international

புகை மண்டலமான பிரிட்டன் தொழிற்சாலை

லண்டன்: வடக்கு இங்கிலாந்தின் நியூடன் லெ வில்லோஸில் உள்ள சான்கி பள்ளத்தாக்கு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

Huge fire engulfs UK industrial estate
Huge fire engulfs UK industrial estateHuge fire engulfs UK industrial estate

வடக்கு இங்கிலாந்தின் நியூடன் லி வில்லோஸில் உள்ள சான்கி பள்ளத்தாக்கு தொழிற்சாலையில் நேற்று அந்நாட்டு நேரப்படி காலை 11 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் கூரையிலிருந்து சுமார் 100 அடி உயரத்திற்கும் மேல் கொழுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி புகைமண்டலமாகக் காட்சியளித்தது.

புகை மேகங்கள் சூழ்ந்த பிரிட்டன் தொழிற்சாலை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த 80க்கும் மேற்பட்ட தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:COVID-19 தாக்கம்: உலகளவில் பழங்குடி சமூகம் அழிவைச் சந்திக்கிறது - ஐ.நா. நிபுணர்

ABOUT THE AUTHOR

...view details