கிரனோபில் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரென தீப்பிடித்தது. கொளுந்து விட்டெரியும் நெருப்பும், கண்ணை மறைக்கும் கரும்புகையும் வெளிப்பட்டன.
பரவிய தீ... அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீசப்பட்ட குழந்தைகள்! வைரல் காணொலி
பிரான்ஸ்: தீப்பிடித்த 40 அடி உயர அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட இரு குழந்தைகளை அக்கம்பக்கத்தினர் காயமின்றி காப்பாற்றினர்.
அதனால் வீடுகளுக்கு உள்ளே சிக்கியிருந்தவர்கள் அபாயக்குரல் எழுப்பினர். அவ்வேளையில் யாரும் எதிர்பாராத சமயத்தில் தனது மூன்று வயது குழந்தையை அதன் தாய் ஜன்னல் வழியாகத் தூக்கி வீசினார். கீழே நின்றவர்கள் சரியான தருணத்தில் குழந்தையைப் பிடித்தனர்.
அடுத்த சில நொடிகளில் அதேபோல தனது 10 வயது மகளையும் ஜன்னல் வழியே வெளியே தள்ளினார். அந்தச் சிறுமியையும் கீழே நின்றவர்கள் பத்திரமாகப் பிடித்தனர். இரு குழந்தைகளும் காயமின்றி காப்பாற்றப்பட்டனர். தற்போது இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.