உலகளவில் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை நோயிலிருந்து மீட்கவும் பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில், லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்தினை உருவாக்கும் ஆரம்பகட்ட சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
சுமார் ஆயிரம் பேரைக் கொண்டு நடைபெற்றுவந்த இந்தச் சோதனையில் ஈடுபட்ட 50 விழுக்காட்டினருக்கு தடுப்பு மருந்துகள் அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களின் உடலில் எத்தகைய நோய் எதிர்ப்பு சக்திகள் தூண்டப்படுகின்றன என்பதை வல்லுநர்கள் குழு கண்டறிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஜென்னர் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் அட்ரியன் ஹில் கூறுகையில்,” தடுப்பு மருந்து பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு தூண்டுகிறது என்பதை கண்டறிவதை இந்தச் சோதனை நோக்கமாக கொண்டுள்ளது. தொற்றுநோயைத் தடுப்பதற்கான மூலக்கூறுகள் நடுநிலையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், இந்த தடுப்பூசி டி-செல்களை வைரஸிற்கு எதிராக போராட தூண்டுகிறது.