வியன்னா(ஆஸ்திரியா):ஆஸ்திரிய நாட்டிலுள்ள வியன்னா பகுதியில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்படவிருந்தது. அதற்கு முன்னதாக மக்கள் அனைவரும் கேளிக்கை விடுதிகளில் திரண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். வியன்னா பகுதியிலுள்ள முக்கிய ஆறு இடங்களில், இந்தச் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலைக் கட்டுப்படுத்த முனைந்த காவல் துறையினரையும் பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த காவல் துறையினர் உள்ளிட்ட 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் காவல் துறையினரால் கொல்லப்பட்டுள்ளதாக, ஆஸ்திரிய நாட்டின் முக்கிய பாதுகாப்பு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.