அமெரிக்க சட்டப்படி, தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் நிறுவனம், தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்புடைய ஃபேஸ்புக் கணக்குகளை முடக்கும் முடிவை நேற்று எடுத்தது. இதையடுத்து தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் அடுத்தடுத்து முடக்கப்பட்டன.