ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் தூவூம்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் கேட் - ஹாரிசன்கேன் இணையர். இவர்கள் செப்டம்பர் 2019ஆம் ஆண்டு, கே.எஃப்.சியின் திருமணப் போட்டியில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அங்குள்ள ஃபுட் தீம் உணவகத்தில் நடந்த திருமணம் தொடர்பான போட்டியில், இந்த இணையர்கள் கலந்துகொண்டு வெற்றி அடைந்துள்ளனர். இதனிடையே இவர்கள் தான் போட்டியின் வெற்றியாளர்கள் என்பதால், கே.எஃப்.சி நிறுவனம் சார்பில் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமண விழாவிற்கு 150க்கும் அதிகமான விருந்தினர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது, மேடைக்கு வந்த கேட் - ஹாரிசன் இணையர், ' கே.எஃப்.சி நடத்திய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், கே.எஃப்.சி தீமில் எங்களது திருமணம் நடைபெறுகிறது. இந்த முறையில் திருமணம் செய்யும் முதல் தம்பதியினர், நாங்கள் தான்' என அறிவித்தனர்.
இதைக் கேட்ட விருந்தினர்கள் மிகவும் ஆச்சரியத்தில் உறைந்தனர். ஏனென்றால் சாதாரண திருமணம் அல்ல; இது கே.எஃப்.சி நடத்தும் விழா என்றால் சொல்லவா வேணும்.