தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 5, 2019, 2:22 PM IST

ETV Bharat / international

மியான்மரில் கடத்தப்பட்ட இந்தியத் தொழிலாளி மரணம்!

மியான்மரில் புரட்சியாளர்களால் கடத்தப்பட்ட இந்தியத் தொழிலாளி உயிரிழந்தார்.

Myanmar

மியான்மர் நாட்டில் புரட்சிப்படையினரான அரக்கன் ராணுவத்துக்கும் அரசுக்கும் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ஐந்து இந்திய கட்டட தொழிலாளர்கள், ஒரு மியான்மர் எம்.பி. உள்பட 10 பேர் கடத்தப்பட்டனர்.

இந்நிலையில் நான்கு இந்தியர்கள் உள்பட எட்டு பேரை புரட்சிப் படையினர் விடுவித்தனர். இதனால் கடத்தப்பட்ட ஒரு இந்தியர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. இத்தகவலை அரக்கன் ராணுவம் உறுதி செய்தது.

தங்கள் குறி அப்பாவி மக்கள் இல்லை என்றும் மியான்மர் எம்.பி.யை கடத்தவே திட்டமிட்டதாகவும் தவறுதலாக இந்த ஒன்பது பேரும் கடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஒருவர் சோர்வின் காரணமாகவே உயிரிழந்தார் என்றும் புரட்சியாளர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயது மதிக்கத்தக்க அந்த நபர் மலைகளில் ஏறும்போது உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய ஊடகங்கள் சொல்வது பொய் - பாகிஸ்தான்

ABOUT THE AUTHOR

...view details