தீபாவளி நேற்று கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் கராச்சி நகரில் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடினர். இதுகுறித்து பாகிஸ்தான் வாழ் இந்துவான பூஜா கூறுகையில், "விளக்குகளை ஏற்றி பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினோம்.
குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் தீபாவளியை இன்று கொண்டாடினோம். தீபாவளியை கொண்டாடுவதற்காகவும் வண்ணங்களை பூசி மகிழ்வதற்காக இங்கு வந்துள்ளோம். எனவே, போரிட்டு ரத்தக் களரியில் விளையாடுவதைக் காட்டிலும் வண்ணங்களை பூசி விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.