தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 5, 2020, 8:01 AM IST

Updated : Mar 17, 2020, 5:49 PM IST

ETV Bharat / international

கரோனா உயிரிழப்பு 492ஆக உயர்வு!

பெய்ஜிங்: கரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 492பேர் உயிரிழந்துள்ளனர்.

Coronavirus toll rises to 492, nearly 24,000 confirmed cases
Coronavirus toll rises to 492, nearly 24,000 confirmed cases

சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் கரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது.

இந்நிலையில், சீனாவில் தற்போது வரை 492 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும், 24,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 10 நாள்களில் புதிய மருத்துவமனையையும் சீனா கட்டியுள்ளது. மேலும், கரோனா தொற்று வேகமாக பரவுவதைத் தடுக்க சீனா பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க...ட்ரம்பின் மத்திய கிழக்கு திட்டத்தை நிராகரித்தது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு!

Last Updated : Mar 17, 2020, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details