கடந்தாண்டு சீனாவிலுள்ள வூகான் நகரில் கரோனா தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸை அமெரிக்க அதிபர் சீனா வைரஸ் என்று ஒருமுறை குறிப்பிட்டார். இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச்சூழ்நிலையில், வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து ஆராய்வதற்காக உலக நாடுகளின் ஒப்புதலுடன் உலக சுகாதார அமைப்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் வைரஸின் தடத்தை அறிய ஐ.நா.வின் அலுவலர்கள் இருவர் சீனா சென்றுள்ளனர். அவர்களுக்கு வழங்கவேண்டிய ஒத்துழைப்பு குறித்து சீன அரசாங்கம் கலந்தாலோசித்துள்ளது.