பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு நாடுகளுக்கிடையே விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவக்கூடிய இடங்களைக் கண்டறியும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் அந்நாட்டிற்கு சென்ற சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள எஜின் நகரில் தொற்று பரவல் வேகமாக பரவிவருவதால், அங்குள்ள பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.