தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 15, 2021, 5:00 PM IST

ETV Bharat / international

வூகான் நகரைத் தாக்கிய சூறாவளி: 7 பேர் பலி நூற்றுக்கணக்கானோர் காயம்

சீனாவிலுள்ள வூகான், சுஜோ ஆகிய நகரங்களை வலிமையான சூறவாளி தாக்கியதில், ஏழு பேர் உயிரிழந்ததோடு, 230க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

7 killed, over 230 injured after after tornado hits Chinese cities
வூகான் நகரைத் தாக்கிய சூறாவளி: 7பேர் உயிரிழப்பு, 230க்கும் மேற்பட்டோர் காயம்

பெய்ஜிங்: இரண்டு வலிமை வாய்ந்த சூறாவளி சீனாவின் வூகான், சுஜோ ஆகிய நகரங்களை நேற்றிரவு (மே.14) தாக்கியது. வூகான் நகரைத் தாக்கிய சூறவாளியால், பல கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், பல மரங்கள் சரிந்து விழுந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

தொடர்ந்து, பாதிப்புகள் குறித்து உள்ளூர் அலுவலர்கள் இன்று (மே.15) காலை கணக்கெடுத்தபோது, 27 வீடுகள் சூறாவாளியால் சேதமடைந்தததும், எட்டு சதுர மீட்டர் அளவுள்ள கட்டுமான தளம் தரைமட்டமானதும் தெரியவந்துள்ளது. மேலும், ஆறு பேர் உயிரிழந்ததும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் தெரியவந்தது.

மற்றொரு நகரான சுஜோவில் சூறவாளி தாக்கியதில், ஒருவர் உயிரிழந்ததோடு, 21 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:ராக்கெட்களை வானிலேயே அழிக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அரண்... அயன் டோம் சிஸ்டம் முழுத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details