பெய்ஜிங்: இரண்டு வலிமை வாய்ந்த சூறாவளி சீனாவின் வூகான், சுஜோ ஆகிய நகரங்களை நேற்றிரவு (மே.14) தாக்கியது. வூகான் நகரைத் தாக்கிய சூறவாளியால், பல கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், பல மரங்கள் சரிந்து விழுந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
தொடர்ந்து, பாதிப்புகள் குறித்து உள்ளூர் அலுவலர்கள் இன்று (மே.15) காலை கணக்கெடுத்தபோது, 27 வீடுகள் சூறாவாளியால் சேதமடைந்தததும், எட்டு சதுர மீட்டர் அளவுள்ள கட்டுமான தளம் தரைமட்டமானதும் தெரியவந்துள்ளது. மேலும், ஆறு பேர் உயிரிழந்ததும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் தெரியவந்தது.