தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கையில் வேன் மீது பேருந்து மோதி கோர விபத்து - 10 பேர் பலி!

கொழும்பு: இலங்கையில் வேன் மீது பேருந்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

By

Published : Apr 17, 2019, 4:43 PM IST

10 பேர் பலி

இலங்கையில் திருகோணமலையில் இருந்து தியாதலவா என்ற இடத்திற்கு இன்று அதிகாலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மஹியங்கனையா எனும் இடத்தில் எதிரே வந்த வேன் மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர். மேலும், இதில் படுகாயமடைந்த 11 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பேருந்து ஒட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details