கரோனா விவகாரத்தில் அமெரிக்கா, சீனாவுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பர் சீனாவிற்கு செல்லவுள்ளார்.
செயலராக நியமிக்கப்பட்ட பிறகு முதன்முதலான அவர் சீனாவிற்கு செல்லவுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சீன வெளியுறவுத் துறை செயலரிடம் பல விவகாரங்கள் குறித்து ஆலோசித்துள்ளேன். இரு நாட்டின் நலனுக்காகவும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் விதமாகவும் இந்தாண்டு இறுதிக்குள் சீனாவிற்கு செல்லவுள்ளேன்.