பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவை நீக்கப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்க வேண்டும் எனக் கோரினார். ஆனால் ஐநா சபை ஆலோசனை மட்டும் நடத்தலாம் என அனுமதித்துள்ளது.
காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. இன்று ஆலோசனை
நியூயார்க்: காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.
காஷ்மீர் விவகாரம்
இம்ரான் கான் வெளிப்படையான விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரிய நிலையில் ஆலோசனைக்கு மட்டும் அனுமதி கிடைத்தது பின்னடைவாகக் கருதப்படுகிறது என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஐநா சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளில் சீனாவைத் தவிர இதர நாடுகள் பாகிஸ்தானின் கோரிக்கையில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.