ஸ்பேஸ்-எக்ஸ் என்ற தனியார் அமெரிக்க விண்வெளி மையம் சார்பாக, கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நாளை (மே 27) மாலை 4.33 மணிக்கு, விண்வெளிக்கு இரண்டு வீரர்களை ராக்கெட்டில் அனுப்பவுள்ளனர். இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நடக்கவுள்ளதால் மக்கள் மத்தியிலும், ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், நாசாவின் கமர்ஷியல் குழு திட்டத்தின் மேலாளர் கேத்தி லூடெர்ஸ் கூறுகையில், "ராக்கெட் ஏவுதலுக்கு உண்டான அனைத்து பணிகளும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தற்போது, எங்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே சவால் வானிலையை கட்டுப்படுத்துவதைக் கண்டுபிடிப்பதுதான். இரண்டு நாள்களாக பெய்த மழை தற்போது குறைந்துள்ளது. நாங்கள் தொடர்ந்து விழிப்புடனும், கவனமாகவும் இருக்கிறோம். வானிலை மாற்றத்தினை பொருத்து ராக்கெட் ஏவுதல் முடிவு செய்யப்படும்" என்றார்.