தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 11, 2020, 5:27 AM IST

ETV Bharat / international

அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸின் சிலைக்கு தீ வைப்பு!

அமெரிக்காவை கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸால்தான் அமெரிக்கா பூர்வகுடி மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளானார்கள் எனக்கூறி வெள்ளை நிற வெறிக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் அவரின் சிலைக்கு தீ வைத்துள்ளனர்.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலைக்கு தீ வைப்பு

ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டு வெள்ளை நிறவெறி காவலரால் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து உலகமெங்கும் நிறவெறிக்கு எதிரான போரட்டம் பற்றிக்கொண்டது. அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போராட்டக்காரர்கள் போராடிவருகின்றனர்.

இந்த போராட்டத்தின் அங்கமாக ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகளை அழைத்துவந்து வியாபாரம் செய்த நபர்கள், மன்னர்களின் சிலைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலுள்ள கிறிஸ்டோபர் கொலம்பஸின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொழுத்தி ஏரியில் வீசினர்.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததே அமெரிக்கப் பூர்வகுடி மக்களின் இனப்படுகொலைக்கு காரணமாக அமைந்தது என முழக்கமிட்ட சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தின்போது அப்பகுதியில் காவலர்கள் யாரும் இல்லையென்றும் காவல் துறையின் கண்காணிப்பு ஹெலிகாப்டர் மட்டும் அப்பகுதியில் சுற்றித்திரிந்ததாகவும் கூறப்படுகிறது.

கிறிஸ்டோபர் கொலம்பஸூக்கு தென் அமெரிக்காவில் வைக்கப்பட்ட முதல் சிலை இது என்பதும் இந்தச்சிலையை அகற்ற பூர்வகுடி மக்கள் நீண்ட நாள்கள் போராடிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details