இதுதொடர்பாக ட்விட்டரில் பெர்னி சான்டர்ஸ் பதிவு ஒன்றையிட்டிருந்தார். அதில் , "20 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். (டெல்லியில்) இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த (அமெரிக்க அதிபர்) ட்ரம்ப், அந்தக் கலவரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என (பொறுப்பற்ற முறையில்) பதிலளித்துள்ளார். இதன்மூலம், மனித உரிமை மீறலை அவர் தடுக்கத் தவறிவிட்டார்" என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி வட- கிழக்குப் பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கடந்த திங்கள் அன்று வன்முறையாக வெடித்தது. இரண்டு நாட்கள் தொடர்ந்த இந்த வன்முறையில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.