லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று(நவ.5) அஸ்ட்ரோவேல்ட் என்னும் இசை விழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது ரசிகர்கள் பலர் மேடையின் முன்பகுதிக்கு செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது, சிலர் தரையில் விழுந்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அங்கிருந்து வெளியேற முற்பட்டனர்.
இதன்காரணமாக நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். முதல்கட்ட தகவலில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜூனியர் என்டிஆருக்கு உடற்பயிற்சியின் போது விபத்து... மருத்துவமனையில் அனுமதி...