அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ஹென்டர்சன் நகரத்தில், நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், நான்கு பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பலத்த காயமடைந்த ஒருவரை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.