ஜோகன்னஸ்பர்க்: மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்கா கொள்ளுபேரன் சதீஷ் துபெலியா தனது 66ஆவது பிறந்தநாளை கொண்டாடிய மூன்று நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (நவ.22) கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஆளானார் என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
துபெலியாவின் சகோதரி உமா துபெலியா மெஸ்திரி கூறுகையில், “நிமோனியா காரணமாக சதீஷ் துபெலியா ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையிலே உயிரிழந்துவிட்டார்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “என் அன்புக்குரிய சகோதரர் நிமோனியா நோயால் ஒரு மாதத்திற்குப் பிறகு காலமானார். நிமோனியா காய்ச்சலுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது அவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.