நம்பியா நாட்டில் ஒமருரு பகுதியில் எரிண்டி ப்ரைவேட் கேம் ரிசர்வ் உள்ளது. இங்கு புகைப்படக் கலைஞர் குயின்டஸ் ஸ்ட்ராஸ் சஃபாரியில் பயணித்து கொண்டிருக்கும்போது, பிறந்த சிறிது நாள்களான குட்டி நீர்யானை அதன் தாயுடன் விளையாடுவதைக் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று குட்டியை நோக்கி யானை ஒன்று வருவதைப் பார்த்தார். யானையின் பெரிய உருவத்தைக் கண்டு பயந்த குட்டி நீர்யானை கூச்சலிடத் தொடங்கியது. குட்டியின் அலறல் சத்தத்தைக் கண்டு வேகமாக ஒடி வந்த நீர்யானை, யானையை எதிர்த்து சண்டையிட்டது. அப்போது நீர்யானை தனது குட்டியையும் அரவணைத்துக் கொண்டு, தனது கூர்மையான பற்களால் யானையின் தும்பிக்கையைக் கடித்ததில், யானைக்கு காயம் ஏற்பட்டது.