நைஜீரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரசுப் பள்ளி மாணவர்கள் 333 பேர் மாயமாகினர். இவர்களை பயங்கரவாத அமைப்பு கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பள்ளி மாணவர்களை கடத்தி வைத்தது நாங்கள் தான் என போக்கோ ஹாராம் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், எதிர்பாராத விதமாக பள்ளிக்குள் நுழைந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.