தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2022, 12:16 PM IST

ETV Bharat / entertainment

மீண்டும் தொடங்கியது சிம்புவின் ’பத்து தல’ ஷூட்டிங்

கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘பத்து தல’ திரைப்பட ஷூட்டிங் நடைபெற்று வருவதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

மீண்டும் தொடங்கியது சிம்புவின் ’பத்து தல’ ஷூட்டிங்
மீண்டும் தொடங்கியது சிம்புவின் ’பத்து தல’ ஷூட்டிங்

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிகர்கள் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘பத்து தல’.

படம் வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக சிம்பு தனது தந்தையின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்து தல படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ஷூட்டிங் நடைபெற்று வருகிறது என புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். சிம்பு நடிப்பில் ’வெந்து தணிந்தது காடு’ படம் அடுத்த மாதம் வெளியாக்வுள்ள நிலையில், ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:ரோலிங் ஸ்டோன் முதல் செஸ் ஒலிம்பியாட் வரை - 'என்ஜாயி எஞ்சாமி' சர்ச்சை

ABOUT THE AUTHOR

...view details