தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.
'அதிமுகவை நிராகரித்து தோற்கடிக்க வேண்டும்' - கருணாஸ் சூளுரை
சென்னை: 234 தொகுதிகளிலும் அதிமுகவை தோற்கடிக்க அயராது பணியாற்ற வேண்டும் என கருணாஸ் தனது கட்சியினரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (மார்ச் 16) அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி போட்டியிடவில்லை. 234 தொகுதிகளிலும் அதிமுகவை தோற்கடிக்க அயராது பணியாற்ற வேண்டும் என்று எங்கள் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு கருணாஸ் வெற்றி பெற்ற நிலையில், இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கருணாஸ் கடிதம் கொடுத்தும் திமுகவிடமிருந்து எந்த பதிலும் வராததால், தான் அளித்த ஆதரவை கருணாஸ் திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.