தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 3, 2021, 3:43 PM IST

ETV Bharat / crime

குட்கா கடத்தல் - 7 பேர் கைது!

திருநீர்மலை சர்வீஸ் சாலையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tobacco items smuggling
Tobacco items smuggling

திருநீர்மலை சர்வீஸ் சாலையில், மினிவேனில் போதை பொருளான குட்கா கடத்தபடுவதாக பம்மல் சக்கர் நகர் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் திருநீர்மலை சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு சொகுசு கார், மினிவேனை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அதில் மறைத்து வைத்திருந்த 750 கிலோ குட்கா, 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர், பின்பு விசாரணை மேற்கொண்டதில் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அனகாபுத்தூர் காமராஜபுரத்தை சேர்ந்த அருட்செல்வம், சுரேஷ், ராஜேஷ், பிரசாத் என்பது தெரியவந்தது. அவர்களுடன் சேர்த்து மூன்று ஓட்டுநர்கள் உள்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் ஓசூரிலிருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை வண்டலூர் குடோனில் வைத்து வினியோகம் செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரோனா 3ஆவது அலையையும் சமாளிக்க தயார் நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details